மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது; அப்ஸரா ரெட்டி
மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது என அப்ஸரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பத்திரிகையாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பணியாற்றிய அனுபவமுள்ள அப்ஸரா ரெட்டி முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் தன்னை இணைத்து கொண்டார்.
அதன்பின் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய மகளிர் அணி பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மக்களின் விஸ்வாசம் இல்லாமல், நடிகர் ரஜினியால் முதல் அமைச்சர் ஆக முடியாது என விமர்சித்தார்.
Related Tags :
Next Story