“சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்


“சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்
x
தினத்தந்தி 18 Jan 2019 10:45 PM GMT (Updated: 18 Jan 2019 5:23 PM GMT)

வளர்ந்து வரும் இந்திய இசை கலைஞர்களுக்கு இசையமைக்க வாய்ப்பளிக்கவும், புதிய இசையமைப்பாளர்களை உருவாக்கவும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மும்பையில் இதனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி  நடந்தது. அதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்துகொண்டு பேசியதாவது:-

“ஆங்கில இசை கலைஞர்களையும், தனி இசை கலைஞர்களையும் ஆதரிக்க வேண்டும். அவர்களுக்கு உதவி செய்யவும் முன்வர வேண்டும். யூடியூப்பில் தனிப்பட்ட முறையில் சிறப்பான தனி இசைப்பாடல்களை நான் கேட்டு இருக்கிறேன். அந்த பாடல்களை உருவாக்கிய இசை கலைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. அந்த எதிர்காலத்தை நாம் உருவாக்க வேண்டும்.

தனி இசை கலைஞர்களுக்கான சந்தையை ஏற்படுத்த வேண்டும். இதற்காக பலர் உழைக்கிறார்கள். சில நேரங்களில் தனி இசையானது திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றன. அது வரவேற்கத்தக்கது. தனி இசைப்பாடல் திரைப்படத்தில் இடம்பெற வேண்டும் என்று நினைக்கிறேன். மக்கள் சிந்தனை சிறிய வட்டத்துக்குள் இருக்கக்கூடாது. அவர்கள் கற்பனை தூண்டப்பட வேண்டும். அது நடக்க வேண்டும் என்றால் கட்டுப்பாடு, விதிமுறைகள் இருக்கக்கூடாது. திரைப்படங்களில் இடம்பெறும் இசை சிறப்பானது. ஆனாலும் நடிகர், நடிகை, கதை, இயக்குனர் என்று இசைக்கான கட்டுப்பாடுகள் அங்கு அதிகம். ஆனால் தனி இசையில் அப்படி இல்லை. அங்குள்ள கற்பனைக்கு எல்லை கிடையாது.”

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

Next Story