கவர்ச்சி படங்கள் வெளியிட்ட பிரியங்கா சோப்ரா, யாஷிகாவை விமர்சித்த ரசிகர்கள்
நடிகைகள் சமூக வலைத்தளத்தில் அரைகுறை ஆடையிலும், நீச்சல் உடையிலும் கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்கள். பட விழாக்களுக்கும் கவர்ச்சி உடையில் வருகிறார்கள்.
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சமீபத்தில் இதனை கண்டித்து இருந்தார். ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் மோசமாக அவர்களை விமர்சிக்கின்றனர்.
இதற்கு நடிகைகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, நடிகை யாஷிகா ஆனந்த் ஆகியோர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்த அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்து அமெரிக்காவில் வசிக்கிறார்.
இப்போது அவரது நடை உடையில் மாற்றங்கள் தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் புதிதாக அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி படத்தை பார்த்து திருமணத்துக்கு பிறகு இப்படி அரைகுறை உடை அணியலாமா? என்று ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.
இதுபோல் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவர்ச்சி படத்தை பார்த்தும் ரசிகர்கள் விமர்சித்தனர். ஒரு ரசிகர் நீங்கள்தான் இந்தியாவின் மியா கலிபா (ஆபாச பட நடிகை) என்றார். அந்த ரசிகருக்கு யாஷிகா ஆனந்த் பதிலடி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story