இத்தாலி அரசிடம் அடிமையாக இருந்தோம் -காங்கிரசை மறைமுகமாக விமர்சிக்கும் நடிகை


இத்தாலி அரசிடம் அடிமையாக இருந்தோம் -காங்கிரசை மறைமுகமாக  விமர்சிக்கும் நடிகை
x
தினத்தந்தி 30 April 2019 4:50 AM GMT (Updated: 30 April 2019 4:50 AM GMT)

நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்துள்ளார்.

மும்பை

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். அத்துடன் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாபச்சன் அவரது குடும்பத்தினர்,  பிரியங்கா சோப்ரா, கஜோல், அஜய் தேவ்கன், அமீர் கான், கரீனா கபூர், மாதுரி தீக்ஷித், கங்கனா ரனாவத், சோனாலி பிந்த்ரே உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகவும், நேரடியாகவும் விமர்சித்தார். காங்கிரசின் ஆட்சி நாட்டை வறுமையில் மட்டுமே வைத்திருந்ததாக சாடினார். 

மேலும் அவர் கூறும்போது, இன்றைய காலக்கட்டத்தில் தான் இந்தியா சுதந்திரமாக இருப்பதாக உணர்கிறேன். முன்னர் நாமெல்லாம் ஆங்கிலேயர்களிடமும், இத்தாலி அரசிடமும் அடிமையாக இருந்தோம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை நாம் இதுவரை பார்த்திராத வறுமையும், மாசும் நாட்டை பீடித்திருந்தது.

கங்கனா, இத்தாலி அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சித்துள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியின் தலைமை பண்பினால் ஈர்க்கப்பட்டு சமீபகாலமாக மோடிக்கு ஆதரவாக பேசி வரும் கங்கனா, அரசியல் கருத்துக்களை அழுத்தமாக பதிவு செய்து வருகிறார்.

Next Story