ஆதியுடன் மணிரத்னம் பேச்சு வார்த்தை!


ஆதியுடன் மணிரத்னம் பேச்சு வார்த்தை!
x
தினத்தந்தி 17 May 2019 4:29 AM GMT (Updated: 17 May 2019 4:29 AM GMT)

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்காக

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் டைரக்டர் மணிரத்னம் ஈடுபட்டு இருக்கிறார்.

இந்த படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழனாக அமிதாப்பச்சன், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, பழுவேட்டரையராக சத்யராஜ், பூங்குழலியாக நயன்தாரா, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப் பட்டுள்ளார்கள்.

படத்தை 2 பாகங்களாக உருவாக்க மணிரத்னம் திட்ட மிட்டு இருக்கிறார். அவரது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். புதிதாக ஆதியுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆதியை எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது? என்ற விவரம் இன்னும் 2 நாட்களில் தெரிந்து விடும்.


Next Story