ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்கு பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா


ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்கு பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா
x
தினத்தந்தி 25 Jun 2019 10:00 PM GMT (Updated: 25 Jun 2019 5:28 PM GMT)

ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பு அரங்கில் இருந்த பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது புதிதாக தயாராகும் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் டேனியல் கிரேக் நடித்து வருகிறார். இதற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. ஜேம்ஸ் பாண்ட் 25 என்ற பெயரில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு ஜமைக்காவில் நடந்தது. அப்போது டேனியல் கிரேக்குக்கு காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பு சில வாரங்கள் நிறுத்தப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள பைன்வுட் ஸ்டூடியோவில் மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் படப்பிடிப்பை நடத்தினர்.

அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது படப்பிடிப்பு அரங்கில் இருந்த பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

இதுகுறித்து ஸ்டூடியோ நிர்வாகம் கூறும்போது, “பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா இருந்தது சாதாரண விஷயம் இல்லை. இந்த கேமரா சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்து விசாரணை நடக்கிறது” என்றனர்.

ரகசிய கேமரா விவகாரம் தொடர்பாக பீட்டர் ஹார்ட்லி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story