நடன கலைஞராக விரும்பிய நிவேதா தாமஸ்
தமிழில் கமல்ஹாசனுடன் ‘பாபநாசம்’ படத்தில் நடித்து பிரபலமான நிவேதா தாமஸ் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவரது புரோசாவாரெவருலா தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
நிவேதா தாமஸ் அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனக்கு நடன கலைஞராக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஐந்து வயதில் இருந்தே நடனம் கற்று வந்தேன். இப்போது நடிகையாகி விட்டேன். தந்தை மகள் உறவை இந்த படம் பேசும். சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகளும் படத்தில் இருக்கும். நான் என்ன செய்தாலும் ஒழுங்காக செய்வேன்.
ஒரே மாதிரி கதைகளில் நடிக்க பிடிக்காது. தமிழ் படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஜென்டில்மேன் படத்துக்கு பிறகு தெலுங்கில் எனக்கு அதிக படவாய்ப்புகள் வந்தன. ஐதராபாத்தில் வீடு இன்னும் வாங்கவில்லை. விரைவில் வாங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
மீ டூ ஒரு இயக்கம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் எல்லா துறைகளிலும் இருக்கிறது. நடிகைகள் பிரபலமாக இருப்பதால் எளிதாக வெளிப்படுத்த முடிகிறது. ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா? என்ன கதாபாத்திரம் என்றெல்லாம் பலரும் கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.”
இவ்வாறு நிவேதா தாமஸ் கூறினார்.
Related Tags :
Next Story