சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ மாறுபட்ட-புதுமையான கதை


சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ மாறுபட்ட-புதுமையான கதை
x
தினத்தந்தி 6 Aug 2019 10:33 AM GMT (Updated: 6 Aug 2019 10:33 AM GMT)

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் ‘ஹீரோ’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

பி.எஸ்.மித்ரன் டைரக்டு செய்கிறார். கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

“இது ஒரு ‘சூப்பர் ஹீரோ’ கதை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ‘ஹீரோ’ படம் தயாராகி வருகிறது. படிப்படியாக உயர்ந்து வரும் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்படும். கல்யாணி பிரியதர்ஷன் அனைவரையும் கவர்கிற ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அர்ஜுன், ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இது, முற்றிலும் மாறுபட்ட-புதுமையான கதை. ‘சூப்பர் ஹீரோ’வின் சாகசங்கள் நிறைய இருக்கும். தொழில்நுட்ப குழுவினர், இந்த படத்தின் மற்றொரு தூண். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பி.எஸ்.மித்ரனின் கதை சொன்ன விதம், என்னை மிகவும் கவர்ந்தது. மிக சிறந்த நடிகர்கள் பட்டாளம், திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள், மாறு பட்ட புதுமையான கதை ஆகிய 3 அம்சங்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது. சென்னையில், 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது. மீதமுள்ள காட்சிகள் ஐதராபாத்தில் படமாக்கப்பட உள்ளன. கிறிஸ்துமஸ் விருந்தாக படத்தை திரைக்கு கொண்டு வருவோம்.” 

Next Story