தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் வழக்குப்பதிவு


தொழிலதிபருக்கு மிரட்டல் விடுத்ததாக நடிகை மீரா மிதுன் வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 27 Aug 2019 10:14 AM GMT (Updated: 27 Aug 2019 10:14 AM GMT)

மிரட்டல் விடுப்பதாக தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகை மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை

2019ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும், சில திரைப்படங்களில் நடித்தவருமான நடிகை மீரா மிதுன், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர்.

அவர் மாடலிங் துறையை சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருடன், பேஸ்புக் வழியாக அறிமுகமான நிலையில் இருவரும் 2017ம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

பணப்பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில், மீரா மிதுன் தொழிலதிபர் ஜோ மைக்கேல் பிரவீனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, ஜோ மைக்கேல் பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தற்போது எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன் மீது, ஆபாசமாக பேசுதல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story