தாய்லாந்து காடுகளில் விரைவில் படப்பிடிப்பு பொன்னியின் செல்வனில் 14 முன்னணி நடிகர் - நடிகைகள்


தாய்லாந்து காடுகளில் விரைவில் படப்பிடிப்பு பொன்னியின் செல்வனில் 14 முன்னணி நடிகர் - நடிகைகள்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:45 PM GMT (Updated: 19 Sep 2019 5:26 PM GMT)

பொன்னியின் செல்வனில் நடிக்க 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் இதுவரை 14 முன்னணி நடிகர்-நடிகைகள் தேர்வாகி இருப்பதாக கூறப்படுகிறது.

வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்தில் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். பார்த்திபன், ரகுமான், மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று ஐஸ்வர்யாராய் கூறியுள்ளார். ஜெயராமும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி உள்ளார். நயன்தாரா, திரிஷா ஆகியோரிடமும் பேசி வருகின்றனர். பூங்குழலி வேடத்தில் நயன்தாரா நடிப்பார் என்று தெரிகிறது.

நடிகர்-நடிகைகள் பட்டியல் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். தாய்லாந்தில் உள்ள காடுகளை படப்பிடிப்பு தளமாக மணிரத்னம் தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

அங்கு அரண்மனை அரங்குகள் அமைத்து 100 நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அனைத்து நடிகர்-நடிகைகளும் தாய்லாந்தில் முகாமிட்டு நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கிறார்கள்.

Next Story