இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு


இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு
x
தினத்தந்தி 12 Oct 2019 7:43 AM GMT (Updated: 12 Oct 2019 7:43 AM GMT)

முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் குடும்பம் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை

பாலிவுட் நடிகை பாயல் ரோஹத்கி 20க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார். செப்டம்பர் 21ஆம் தேதி அன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், மோதிலால் நேரு குறித்தும், ஜவகர்லால் நேரு பற்றியும் ஆட்சேபனைக்குரிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜவகர்லால் நேரு மனைவியின் நடத்தை குறித்து அவதூறு பரப்பப்பட்டிருப்பதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய புகைப்படங்களையும், கருத்துக்களையும் நடிகை பாயல் ரோஹத்கி பதிவு செய்திருந்ததாகவும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், 66 மற்றும் 67 ஆகிய பிரிவுகளில் நடிகை மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story