பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி டி.இமான் இசையில் பாடினார்
டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடியுள்ளார்.
சென்னை,
திறமை இருப்பவர்கள் எங்கிருந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவர்கள். திறமை எங்கிருந்தாலும் அதை பாராட்டவும், உலகத்திற்கு வெளிக்கொணரவும் வேண்டியது ஒவ்வொருவரின் கடமை!
சமீபத்தில் பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கரின் பிரபல பாடலான 'ஏக் பியார் கா நக்மாஅ ஹேய்' என்ற பாடலை ரெயில்வே நடைமேடையில் ராகமாக பாடிக்கொண்டிருந்த ரேணு மண்டல் சினிமாவில் பாட வாய்ப்ப்பு பெற்றார்.
அதே போல் கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் விஸ்வாசம் படத்தில் வரும் 'கண்ணான கண்ணே' பாடலை பாடிய வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியாகி இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டது.
இதை பார்த்த இசையமைப்பாளர் டி.இமான் அந்த சிறுவன் யார் என்ற தகவலை கேட்டறிந்து விரைவிலேயே அவரை திரைப்படத்தில் பாட வைக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார்.
தற்போது அவர் சொன்னதை செய்து காட்டியுள்ளார். ஜீவா நடிப்பில் உருவாகி வரும் 'சீறு' படத்திற்கு இசையமைத்து வருகிறார் டி இமான். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை பாடியுள்ளார் திருமூர்த்தி.
பார்வதி எழுதிய வரிகளுக்கு திருமூர்த்தி குரல் கொடுத்துள்ளார். இந்த செய்தியை இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
Good Day Everyone! Immense Joy to Introduce thambi #NochipattiThirumoorthy as a Playback singer in my next upcoming release #Seeru with @JiivaOfficial in the lead! Directed by @rathinasiva7 Produced by @VelsFilmIntl Lyric by Parvathy! A soulful song coming your way! Praise God! pic.twitter.com/A5V6vNmsXh
— D.IMMAN (@immancomposer) 23 October 2019
Related Tags :
Next Story