சஸ்பென்ஸ் -திகிலுடன் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்


சஸ்பென்ஸ் -திகிலுடன் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்
x
தினத்தந்தி 25 Oct 2019 12:33 PM GMT (Updated: 25 Oct 2019 12:33 PM GMT)

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ‘குற்றம் புரிந்தால்’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.

‘குற்றம் புரிந்தால்’ சஸ்பென்ஸ் -திகில் கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதில் புது கதாநாயகன் ஆதிக்பாபு அறிமுகம் ஆகிறார். புதுமுகம் அர்ச்சனா, ‘நாடோடிகள்’ அபிநயா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டு செய்து இருக்கிறார், டிஸ்னி. சுகந்தி ஆறுமுகம் தயாரித்துள்ளார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Next Story