தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்


தீபிகா படுகோனே - அலியாபட் மோதல்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:45 PM GMT (Updated: 27 Nov 2019 7:28 PM GMT)

மும்பையில் நடந்த திரைப்பட நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க கணவர் ரன்வீர் சிங்குடன் தீபிகா படுகோனே சென்று இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அலியாபட் உள்பட மேலும் சில நட்சத்திரங்கள் பங்கேற்றனர்.

தீபிகா படுகோனேவும், ரன்பீர் கபூரும் ஏற்கனவே காதலித்தனர். ஜோடியாகவும் சுற்றினார்கள். திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறி இருந்தனர். 

காதல் நினைவாக ஆர்.கே என்ற இன்ஷியலையும் கழுத்துக்கு கீழே தீபிகா படுகோனே பச்சை குத்தி இருந்தார். அதன்பிறகு இந்த காதல் முறிந்தது. பின்னர் மன அழுத்தத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று பிறகு ரன்வீர் சிங்கை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

இந்த நிலையில் டி.வி. நேர்காணலில் தீபிகா படுகோனே கூறும்போது, “ரன்பீர் கபூரை காதலித்தேன். ஆனால் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டேன். அதேமாதிரி ரன்பீர் கபூர் என்னை காதலித்து இப்போது அலியாபட்டை மணக்க போகிறார் என்று கூறினார். இது அலியாபட்டுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதை ஏன் இப்போது இங்கே சொல்கிறீர்கள் என்று தீபிகா படுகோனேவை பார்த்து கோபமாக கேட்டார். ரன்வீர் சிங்குக்கும் தீபிகா படுகோனே பேசியது பிடிக்கவில்லை. இது மும்பை பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story