‘நான்தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு’ ரஜினியின் அரசியல் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு


‘நான்தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு’ ரஜினியின் அரசியல் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 29 Nov 2019 12:15 AM GMT (Updated: 28 Nov 2019 6:34 PM GMT)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வருகிற 7-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

தர்பார் படத்தில் பாடலாசிரியர் விவேக் எழுதிய சும்மா கிழி என்று தொடங்கும் அறிமுக பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார். இந்த பாடலை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். அனிருத் மற்றும் படக்குழுவினருடன் ரஜினிகாந்த் ஸ்டூடியோவில் பேசுவது போன்ற வீடியோ காட்சிகளும் அதில் உள்ளன.

பாடலில் “சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங்குக்கும் நான்தாண்டா லீடு. நெருப்பு பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு. பில்லா என் வரலாறு பார்த்தவன் நான் பலபேரு. உன்னோட பேட்டைக்கும் நான்தான்டா லாடு. கறுப்பு தோலோட சிங்கம் வரும் சீனோட எடமே பத்திக்கும் அந்தமாதிரி” என்பன போன்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

இந்த பாடல் வரிகள் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பாடலாசிரியர் விவேக் கூறும்போது, “அனிருத் இசையில் சும்மா கிழி பாடல் ரசிகர்களை ஆட்டம்போட வைத்துள்ளது. பாடல் முழுவதையும் கேட்டு விட்டு ரஜினிகாந்த் எங்களை பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

Next Story