‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்


‘பைக்’கில் சாகசம் செய்தபோது ‘வலிமை’ படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார், அஜித்
x
தினத்தந்தி 21 Feb 2020 2:00 AM GMT (Updated: 20 Feb 2020 11:07 AM GMT)

ஆபத்தான காட்சிகளை படமாக்கும்போது, ‘டூப்’ நடிகர்களை பயன்படுத்தாமல், ஒரிஜினலாக உயிரை பணயம் வைத்து நடிக்கும் துணிச்சல் மிகுந்தவர், அஜித்குமார்.

அஜித்குமார் இதுவரை பலமுறை விபத்தில் சிக்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியிருக்கிறார்.

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அவர் தற்போது, ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.

அஜித்குமார், ‘பைக்’கில் சாகசம் செய்கிற காட்சியில், ‘டூப்’ நடிகரை பயன்படுத்தாமல், அவரே துணிச்சலாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘பைக்’ சறுக்கியதால் அவர் விபத்தில் சிக்கினார். அஜித் கை, கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இருப்பினும் அஜித்குமார் படப்பிடிப்பை ரத்து செய்யாமல், தொடர்ந்து அந்த காட்சிகளில் நடித்து முடித்தார். அடுத்த நாள் படப்பிடிப்பிலும் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார். 

Next Story