சினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை - எஸ்.வி.சேகர்


சினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை - எஸ்.வி.சேகர்
x
தினத்தந்தி 21 April 2020 8:30 AM GMT (Updated: 21 April 2020 10:31 AM GMT)

சினிமா ஹீரோக்களிடம் நீங்கள் ஏன் உதவி செய்யவில்லை என்று கேட்பது அறியாமை என்று எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது., இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை மத்திய அரசு பேரிடராக அறிவித்தது.  இந்த நிலையில் கொரோனா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு உதவும் வகையில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் மத்திய. மாநில அரசுகளுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் உதவி செய்வது பற்றி எஸ்.வி.சேகர் கருத்து ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில், "சினிமாவில் வில்லனாக நடிப்பவர்களிடம் வாழ்க்கையிலும் கொலை கொள்ளை கற்பழிப்பு ஏன் செய்வதில்லை என்று கேட்கிறோமா? அது போல ஹீரோக்களிடமும் நீங்க ஏன் இதுக்கு உதவலை அதுக்கு உதவலை என்று கேட்பதும் ஒருவித அறியாமை" என்று கூறியுள்ளார்.

Next Story