‘லேப்’பில் உருவான கொரோனா வைரஸ்? நடிகை ரைசா கோபம்


‘லேப்’பில் உருவான கொரோனா வைரஸ்? நடிகை ரைசா கோபம்
x
தினத்தந்தி 15 Jun 2020 1:48 AM GMT (Updated: 15 Jun 2020 1:48 AM GMT)

கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிகை ரைசா வில்சனும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

சீனாவில் உள்ள விலங்குகள் இறைச்சி சந்தையில் இந்த வைரஸ் உருவாகி இருக்கலாம் என்று கூறப்பட்டது. அங்குள்ள பரிசோதனை கூடத்தில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. நடிகை ரைசா வில்சனும் இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ளார். இவர் தனுசின் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தவர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இதையடுத்து பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது மேலும் சில படங்களில் நடித்து வருகிறார். கொரோனா பற்றி ரைசா கூறியதாவது:-

“நான் வேலையை தொடங்க விரும்புகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆனால் கொரோனா இருக்கிறதே? இந்த வைரஸ் இங்கு ஒரு காரணமாகத்தான் வந்து இருக்கிறதா? அதை யாரேனும் உள்நோக்கத்தோடு பரப்பினார்களா? இதில் இருந்து மீண்டு வர இன்னும் என்னவெல்லாம் நாம் செய்ய வேண்டி இருக்கிறதோ? ஊரடங்கை என்னால் கையாள முடியவில்லை. ‘லேப்‘பில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானால் நான் நேரடியாக அங்கு செல்வேன். என்னோடு வருபவர்கள் யார்? இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story