’கணவருடன் சேர்ந்து யோகா செய்கிறேன்!” - நடிகை சமந்தா
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தாவுக்கு தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்ட இவர், ஐதராபாத்தில் கணவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்.
ஊரடங்கு நாட்களில் இவர் கணவருடன் சேர்ந்து யோகா செய்து வருகிறார். மீதி நேரங்களில் தோட்ட வேலையை கவனிப்பது, நாய்க்குட்டிகளுடன் விளையாடுவது என பொழுதை போக்குவதாக கூறினார். அவர் யோகா செய்வதையும், நாய்க்குட்டிகளுடன் விளையாடுவதையும் படம் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். ரசிகர்களுடன் கலந்துரையாடுவதையும் தவற விடுவதில்லை.
‘’பெரும்பாலான கதாநாயகிகள் பொழுதை போக்குவதற்காக சமையல் செய்கிறார்கள். உங்களுக்கும் அதில் ஆர்வம் இருக்கிறதா?” என்று கேட்டதற்கு, ‘’சமையலை விட எனக்கு தோட்ட வேலைகள் மற்றும் கணவருடன் சேர்ந்து யோகா செய்வதில் ஆர்வம் இருக்கிறது. எனக்கு பிடித்ததை செய்கிறேன்” என்றார், சமந்தா!