கதை தேர்வில் பக்குவமான நடிகை டாப்சி
கதைகளை தேர்வு செய்யும் அளவுக்கு பக்குவம் பெற்றேன் என நடிகை டாப்சி கூறியுள்ளார்.
சென்னை,
கொரோனா ஊரடங்கில் நடிகை டாப்சி அளித்துள்ள பேட்டி வருமாறு:-
“எனது 10 வருட சினிமா வாழ்க்கையை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்துள்ளேன். நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகிகள் பட்டியலில் என்னையும் சேர்த்துள்ளனர். தொடர்ந்து இரு மொழிகளிலும் வாய்ப்புகள் வருகின்றன. அதன்பிறகு இந்திக்கு போனேன். அங்கு எனக்கு வெற்றிகள் கிடைத்தன.
இந்தியில் நடித்த பிங்க் படம் எனது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்தன. நானும் கதைகளை தேர்வு செய்யும் அளவுக்கு பக்குவத்தை பெற்றேன்.
அதற்கு முன்பு எனக்கு கதைகள் தேர்வில் அவ்வளவு அனுபவம் இல்லாமல் இருந்தது. வந்த படங்களில் எல்லாம் நடித்தேன். தென்னிந்திய திரையுலகம்தான் எனக்கு எல்லா பாடமும் கற்றுக்கொடுத்தது. பல இந்தி படங்கள் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. மேலும் 3 இந்தி படங்களுக்கு ஒப்பந்தமாகி உள்ளேன். தமிழ், தெலுங்கு படங்களிலும் மீண்டும் நடிக்க இருக்கிறேன்” என கூறினார்.
Related Tags :
Next Story