டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்தார்


டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்தார்
x
தினத்தந்தி 1 Aug 2020 8:24 PM GMT (Updated: 1 Aug 2020 8:24 PM GMT)

டைரக்டர் அஜய் ஞானமுத்து சம்பளத்தை பாதியாக குறைத்துள்ளார்.

சென்னை,

நயன்தாரா, விஜய் சேதுபதி, அதர்வா ஆகியோர் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த படம், ‘இமைக்கா நொடிகள்.’ அஜய் ஞானமுத்து டைரக்டு செய்திருந்தார். படம் வெற்றி பெற்றதுடன், படத்தில் இடம்பெற்றிருந்த “நீயும் நானும்...” என்ற பாடல் பல கோடி பார்வையாளர்களை கவர்ந்தது. அதை டைரக்டர் அஜய் ஞானமுத்துவும், அவரது குழுவினரும் கொண்டாடினார்கள்.

அஜய் ஞானமுத்து இப்போது, ‘கோப்ரா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில், கதாநாயகனாக விக்ரம் நடிக்கிறார். கதாநாயகி, ஸ்ரீநிதி செட்டி. பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது.

இந்தநிலையில், டைரக்டர் அஜய் ஞானமுத்து தனது சம்பளத்தை பாதியாக குறைத்துக் கொண்டாராம். கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்யும் வகையில், சம்பள குறைப்பு செய்து கொண்டதாக அவர் கூறினார்.

Next Story