நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் குவிப்பு


நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு; போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 3 Aug 2020 1:01 AM GMT (Updated: 3 Aug 2020 1:01 AM GMT)

நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு நடந்த நிலையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்த கங்கனா ரணாவத் தற்போது வாழ்க்கை கதையான தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்போது இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, “இரவு 11.30 மணிக்கு எனது அறையில் நான் இருந்தபோது அருகில் இரண்டு முறை துப்பாக்கி சத்தம் கேட்டது. 8 வினாடி இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்தன. வீட்டு காம்பவுண்ட் சுவருக்கு பின்னால் இருந்து யாரோ சுட்டுள்ளனர். எனது வீட்டுக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் தப்பி சென்று இருக்கலாம். சில நாட்களுக்கு முன்பு முதல் அமைச்சர் மகன் குறித்து நான் கருத்து தெரிவித்ததற்காக இந்த மிரட்டல் விடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் மும்பையில் இருந்து மணாலிக்கு வந்துள்ளதால் இந்த வீட்டை குறிவைத்து சுட்டுள்ளனர். இதற்கு நானே சாட்சி. சத்தம் கேட்டதும் பாதுகாவலர்கள் தேடியபோது யாரும் இல்லை. உள்ளூரில் யாருக்காவது பணம் கொடுத்து இப்படி மிரட்டி இருக்கலாம். சுஷாந்த் சிங்கையும் இப்படித்தான் பயமுறுத்தி இருக்க வேண்டும். நான் பின்வாங்காமல் தொடர்ந்து கேள்விகள் கேட்பேன்” என்றார். இதையடுத்து கங்கனா வீட்டில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story