நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது


நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 Aug 2020 12:43 AM GMT (Updated: 4 Aug 2020 12:43 AM GMT)

நடிகர் மோகன்பாபு வீட்டில் மிரட்டிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு, இவர் தமிழில் அண்ணன் ஒரு கோவில், ரத்தபாசம், வெற்றிக்கு ஒருவன், தாய்மீது சத்தியம், குரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சூர்யாவின் சூரரை போற்று படத்திலும் நடித்து இருக்கிறார். இந்த படம் திரைக்கு வர உள்ளது. மோகன்பாபு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜல்லப்பள்ளியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த வீட்டுக்கு 4 பேர் காரில் வந்து இறங்கினார்கள். பாதுகாவலரிடம் மோகன்பாபு வீட்டில் இருக்கிறாரா? என்று விசாரித்தபடி அத்துமீறி உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை பாதுகாவலர் தடுத்ததும் மிரட்டி தாக்கினர். தகவல் அறிந்து மோகன்பாபு கீழே வந்ததும் தப்பி ஓடினர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து மோகன்பாபு போலீசில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மிரட்டிய ராகவேந்திரா, ஆனந்த், டேவிட், கவுதம் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடக்கிறது.

Next Story