‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு
‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் அனுஷ்கா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றன. அதில், ‘முந்தானை முடிச்சு’ படமும் ஒன்று. இது, 1983-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அந்த படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருந்தார்.
படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ‘ரீமேக்’ செய்யப்பட்டது.
‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் தயாராகி வருகின்றன. அதில், ‘முந்தானை முடிச்சு’ படமும் ஒன்று. இது, 1983-ம் ஆண்டில் திரைக்கு வந்தது. அந்த படத்தில் பாக்யராஜ் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருந்தார்.
படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், ‘ரீமேக்’ செய்யப்பட்டது.
‘முந்தானை முடிச்சு-2’ படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவை அணுகியதாகவும், அதற்கு அனுஷ்கா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், அதனால் புதிய படங்களை ஏற்கவில்லை என்று அவர் கூறியதாகவும் சொல்லப்படுகிறது.
Related Tags :
Next Story