ஒடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியிடப்படுவது ஏன்? சூர்யா விளக்கம்


ஒடிடி தளத்தில் சூரரைப் போற்று படம் வெளியிடப்படுவது ஏன்? சூர்யா விளக்கம்
x
தினத்தந்தி 22 Aug 2020 9:01 AM GMT (Updated: 22 Aug 2020 9:01 AM GMT)

ஓடிடி தளத்தில் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

சென்னை,

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி ஜோடியாக நடித்துள்ள சூரரை போற்று படம் கொரோனா அச்சுறுத்தலால் திரைக்கு வருவதில் தாமதமானது. தற்போது புதிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் ரிலீசாகி வருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படம் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி இணையதளத்தில் வெளியானது. இதையடுத்து சூர்யாவின் சூரரை போற்று படத்தை தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்தனர்.

இந்நிலையில் சூர்யாவின் 'சூரரைப் போற்று' திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ல் வெளியிடப்படுகிறது என்றும்,  தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும் என சூர்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து சூர்யா மேலும் கூறியிருப்பதாவது:- கடுமையான உழைப்பில் தயாரான படங்களை, சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.  திரையரங்குகளில் தற்போது திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது. 

 சூரரைப் போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து ரூ.5 கோடியை பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள், திரையுலகை சார்ந்தவர்கள், கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.  தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story