தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் அறிக்கை
தன்னுடைய பெயரை தவறாகப் பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அஜீத் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுனுள்ளது.
சென்னை:
நடிகர் அஜித்தின் அதிகாரப்பூர்வ மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே என அஜித் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
எனது பிரதிநிதிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அண்மையில் அஜித்தின் பெயரை பயன்படுத்தி பலர் கட்சியில் இணைந்ததாக செய்தி வெளியான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதால் அஜித்தின் பெயரை பயன்படுத்தி யாரேனும் அணுகினால் சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்க வேண்டும். நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே அஜித்தின் அனுமதிபெற்ற அதிகாரப்பூர்வ பிரதிநிதி என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story