நடிகர் சூர்யாவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் பிடிபட்டார்.
சென்னை,
நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சற்று நேரத்தில் வெடித்து சிதறப்போவதாகவும் மர்ம நபர் ஒருவர் நேற்று பகலில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார். நடிகர் சூர்யாவின் அலுவலகம் சென்னை ஆழ்வார் பேட்டை, சீதாம்மாள் காலனியில் செயல்பட்டு வந்தது. தற்போது அது பூட்டிக்கிடக்கிறது. அந்த அலுவலகம் தற்போது அடையாறு பகுதிக்கு மாற்றப்பட்டு விட்டதாக தெரிகிறது.
பூட்டிக்கிடந்த அந்த அலுவலகத்தை திறந்து போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினார்கள். குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தியதில், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வர் (வயது 28) என்பவர்தான் மிரட்டல் விடுத்த நபர் என்று தெரியவந்தது. அவரை மரக்காணம் போலீஸ் உதவியுடன் பிடித்தனர். அவர் ஏற்கனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சிறைக்கு சென்றவர் ஆவார். அவரிடம் விசாரணை நடக்கிறது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு மேளம், நாதஸ்வரம் இசைத்தும், கரகம் ஆடியும் இசைக்கலைஞர்கள் வந்தனர். திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக அவர்கள் கூறினர்.
பொது இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்ப அட்டைகளை ஒப்படைக்க கிராமமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், உலகம் எங்கும் 200 ஊழியர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை ராஜவீதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சார் பதிவாளர் சிக்கினார். அங்கிருந்து ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.