தெலுங்கானா வெள்ள நிவாரணமாக ரூ.1.5 கோடி நிதி உதவி அளிக்கும் பிரபாஸ்
தெலங்கானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.1.5 கோடி வழங்குவதாக நடிகர் பிரபாஸ் அறிவித்துள்ளார்.
ஐதராபாத்,
தெலங்கானா மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது.இதனால் பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் பலர் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.
வரலாறு காணாத இயற்கைச் சீற்றத்தைச் சந்தித்து வரும் தெலங்கானா மாநில மக்களுக்கு திரை உலகினர் பலரும் உதவி செய்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி வழங்குவதாகப் பிரபல நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக பிரபாஸ் அறிவித்துள்ளார்.
Related Tags :
Next Story