சொல்வதெல்லாம் பொய்; வனிதாவை சாடிய நடிகை கஸ்தூரி


சொல்வதெல்லாம் பொய்; வனிதாவை சாடிய நடிகை கஸ்தூரி
x
தினத்தந்தி 23 Oct 2020 12:17 AM GMT (Updated: 23 Oct 2020 12:17 AM GMT)

சொல்வதெல்லாம் பொய் என்று வனிதாவை நடிகை கஸ்தூரி கடுமையாக சாடியுள்ளார் .


நடிகை வனிதாவுக்கும் 3-வது கணவரான பீட்டர் பாலுக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்துள்ளனர். பீட்டர் பால், மதுவுக்கு அடிமையானவர். அவரை நம்பி ஏமாந்து விட்டேன். பீட்டர் பாலை விட்டு நான் விலகிபோய் விடுகிறேன் என்று வனிதா அழுதபடி பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார். இது பரபரப்பானது.

இந்த வீடியோவை பார்த்த ஒருவர் இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நடிகை கஸ்தூரியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு கஸ்தூரி “வீடியோ வேறயா, பார்த்து விட்டு சொல்கிறேன். எனது அனுபவத்தில் அது எல்லாமே சொல்வதெல்லாம் பொய் ரகம்தான்” என்று பதில் அளித்தார்.

பின்னர் வீடியோவை பார்த்து விட்டு டுவிட்டரில் கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவில் “ஓ மை கடவுளே. நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்தேன். எடிட்டிங் மற்றும் டைட்டில் கார்டுடன் உள்ளது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழைப்போ புரியலைடா சாமி. முழுக்க பொய். தற்புகழ்ச்சி, எல்லோரும் கெட்டவங்க. வனிதா மட்டும் பாதிப்புக்கு உள்ளானவர். எல்லாமே எதிர்பார்த்தவைதான். ஆனால் எலிசபெத் ஹெலன் மீது ஏன் குற்றம் சொல்லணும். நம்ப முடியவில்லை. எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோ மூலம் அதிக பணம் சம்பாதிக்கப்படும். அவர் பீட்டர் பாலுக்கான ஆஸ்பத்திரி செலவுகளை திரும்ப பெறுகிறார் என்று யூகிக்கிறேன். குழந்தைகளை இதில் வெளிப்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

Next Story