பேயாக நடிக்கும் அஞ்சலி, யோகிபாபு


பேயாக நடிக்கும் அஞ்சலி, யோகிபாபு
x
தினத்தந்தி 9 Nov 2020 11:44 PM GMT (Updated: 9 Nov 2020 11:44 PM GMT)

பூச்சாண்டி என்ற படத்தில் அஞ்சலி, யோகிபாபு பேயாக நடித்து வருகிறார்கள்.


அஞ்சலி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். போலீஸ் அதிகாரியாக நடித்த சைலன்ஸ் படம் சமீபத்தில் ஓ.டி.டி.யில் வெளியானது. அடுத்து பூச்சாண்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்தில் அவர் பேயாக வருகிறார். இதில் யோகிபாபுவும் நடிக்கிறார். அவருக்கும் பேய் கதாபாத்திரம்தான். பேய் படங்கள் வரிசையில் இதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் நம்புகின்றனர். கே.எஸ்.சினீஷ் தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணன் ஜெயராஜ் டைரக்டு செய்கிறார். படத்தின் முதல் தோற்றம் வெளியாகி உள்ளது. 

படம் குறித்து இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் கூறும்போது, “குழந்தைகளை மையமாக வைத்து வேடிக்கைகள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக பூச்சாண்டி தயாராகி உள்ளது. அஞ்சலி அற்புதமான நடிப்பால், படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். அஞ்சலியும், யோகிபாபுவும் பேயாக நடித்துள்ள பகுதிகளை, குழந்தைகள் நூறுசதவீதம் வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்து கொண்டாடுவார்கள்” என்றார். இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

Next Story