கொரோனா பாதித்த நடிகை கவலைக்கிடம்


கொரோனா பாதித்த நடிகை கவலைக்கிடம்
x
தினத்தந்தி 30 Nov 2020 10:00 PM GMT (Updated: 30 Nov 2020 6:55 PM GMT)

இந்தி டி.வி. நடிகை திவ்யா பட்நாகர். யா ரிஷ்தா கியா கேக்லதா ஹய் டி.வி. தொடர் மூலம் பிரபலமானார்.

தேரா யார் ஹூன் மெயின் என்ற நகைச்சுவை தொடரில் நடித்தும் புகழ்பெற்றார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

இதுகுறித்து திவ்யா பட்நாகரின் தாய் கூறும்போது, “6 நாட்களாக திவ்யாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் இருந்தது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானதும் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனாலும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது” என்றார். அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி ரசிகர்கள் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

Next Story