தலைவி படப்பிடிப்பு முடிந்தது ஜெயலலிதாவாக நடித்த கங்கனா நெகிழ்ச்சி


தலைவி படப்பிடிப்பு முடிந்தது ஜெயலலிதாவாக நடித்த கங்கனா நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Dec 2020 10:15 PM GMT (Updated: 13 Dec 2020 8:46 PM GMT)

தலைவி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கங்கனா ரணாவத் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இதில் எம்.ஜி.ஆராக அரவிந்தசாமியும், சசிகலாவாக பூர்ணா, ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏ.எல்.விஜய் இயக்குகிறார். கொரோனா பரவலுக்கு முன்பே பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்தது. சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை நடத்தினர்.

இந்த நிலையில் தலைவி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக கங்கனா ரணாவத் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். அத்துடன் ஜெயலலிதா தோற்றத்தில் இருவிரலை காட்டிய படி பொதுக்கூட்ட மேடையில் பேசுவதுபோன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “‘தலைவி படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். இந்த கதாபாத்திரம் எந்த நடிகருக்கும் எளிதில் கிடைக்காத ஒன்று. ரத்தமும் சதையுமாக எனக்கு அமைந்தது. கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினேன். ஆனால் இப்போது திடீரென்று விடைபெறும் நேரம் வந்து விட்டது. படக்குழுவினருக்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Next Story