பட அதிபர் சங்க பதவி: டி.ராஜேந்தர் ராஜினாமா


பட அதிபர் சங்க பதவி: டி.ராஜேந்தர் ராஜினாமா
x
தினத்தந்தி 25 Dec 2020 12:32 AM GMT (Updated: 25 Dec 2020 12:32 AM GMT)

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என டைரக்டர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற 27-ந்தேதி நடைபெற இருக்கிறது.

எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும் திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தான் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர்.

எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன்.

எங்கள் வினியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story