இயற்கை விவசாயத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் நடிகர் ராஜ்கிரண் அறிக்கை


இயற்கை விவசாயத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம் நடிகர் ராஜ்கிரண் அறிக்கை
x
தினத்தந்தி 15 Jan 2021 8:46 PM GMT (Updated: 15 Jan 2021 8:46 PM GMT)

நடிகர் ராஜ்கிரண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

நம் இந்திய நாடு, விவசாய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டது. அரசியல்வாதிகளின் தவறான கொள்கை முடிவுகளால், மீண்டும், அன்னிய கார்ப்பரேட்டுகள், பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி என்ற பெயர்களால், மிகவும் தந்திரத்துடன், உரம், பூச்சிக்கொல்லி, வீரிய கலப்பினம் என்ற பெயர்களில் விஷத்தை நம் கைகளாலேயே போட வைத்து, நம் மண்ணை மலடாக்கிவிட்டார்கள். இன்று நம் விவசாயப்பெருமக்கள், வாழ வழிதெரியாமல் தவிப்பதோடு, தற்கொலையும் பண்ணிக்கொள்கிறார்கள்.

விவசாயம் பொய்த்துப்போனால், விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, நம் மண்ணுக்குள் புதைந்து கிடக்கும், கனிம வளங்களை, கொள்ளையடிக்க, கார்ப்பரேட்டுகள் முயன்று கொண்டிருக்கின்றனர். நாம் விழித்துக்கொள்ள வேண்டிய கடைசி நேர கட்டாயத்தில் இருக்கிறோம். இயற்கை விவசாயத்துக்கு மாறி, நம் மண்ணை உயிர்ப்பித்து, பயிர் செய்து, மதிப்புக்கூட்டு முறையில் வருமானத்தைப் பெருக்கி, விவசாய பெருமக்கள் தலை நிமிர்ந்து மகிழ்ச்சியோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஒவ்வொரு அடி மண்ணும், அதனுள் இருக்கும் கனிம வளங்களும், நம் மூதாதையரின் கடின உழைப்பால் நமக்கு கிடைத்த பொக்கிஷம். அவற்றை நம் சந்ததியினருக்காக பேணிப்பாதுகாக்க உறுதி ஏற்போம்.''

இவ்வாறு ராஜ்கிரண் கூறியுள்ளார்.

Next Story