மிரட்டல்-ரசிகர்கள் தொல்லையால் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகைகள்


மிரட்டல்-ரசிகர்கள் தொல்லையால் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகைகள்
x
தினத்தந்தி 29 Jan 2021 4:39 PM GMT (Updated: 29 Jan 2021 4:39 PM GMT)

கங்கனா ரணாவத், தீபிகா படுகோன் ஆகிய இருவரை தொடர்ந்து, ‘பாதுகாப்பு படை கலாசாரம்’ தென்னிந்திய நடிகைகள் மத்தியிலும் பரவி இருக்கிறது.

சில நடிகைகள் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புக்கு வருகிறார்கள். அந்த பாதுகாப்பு படையினருக்கான செலவுகளையும் தயாரிப்பாளர்களே ஏற்கிறார்கள். இந்த கலாசாரம் மும்பையில் தொடங்கியது. நடிகை ஐஸ்வர்யாராய் ஆரம்பித்து வைத்தார். இவர் படப்பிடிப்புக்கு வரும் போதெல்லாம் கூடவே பாதுகாவலர்களும் வருகிறார்கள்.

இவரை தொடர்ந்து கங்கனா ரணாவத், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் பாதுகாவலர்களுடன் படப்பிடிப்பு களுக்கு வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்புக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்களாம்.

கங்கனா ரணாவத், தீபிகா படுகோன் ஆகிய இருவரை தொடர்ந்து, ‘பாதுகாப்பு படை கலாசாரம்’ தென்னிந்திய நடிகைகள் மத்தியிலும் பரவி இருக்கிறது. நயன்தாராவுடன் பாதுகாப்பு படை வீரர்கள் 8 பேர் படப்பிடிப்புகளுக்கு வருகிறார்கள். இவர்களுக்கான செலவுகளையும் தயாரிப்பாளர்களே ஏற்கிறார்கள். அந்த வகையில், தயாரிப்பாளர்களுக்கு தினமும் ரூ.1.50 லட்சம் கூடுதல் செலவு ஆகிறதாம்.

நயன்தாராவைப்போல் பாதுகாப்பு படையினருடன் படப்பிடிப்புகளுக்கு வரும் இன்னொரு நடிகை, சமந்தா. இவர், 6 பாதுகாவலர்களுடன் வருகிறார். இவர்கள் இருவருக்கும் மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறதாம். அதோடு இவர்கள் இரண்டு பேரும் போகிற இடமெல்லாம் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரள்கிறதாம்.

ரசிகர்கள் செய்யும் குறும்புகளை வெளியே சொல்ல முடியவில்லையாம். அந்த அளவுக்கு இன்ப தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக உதவியாளர்கள் கூறுகிறார்கள்.

Next Story