வைரலாகும் புகைப்படம் புளிய மரத்தில் தொங்கிய கார்த்தி


வைரலாகும் புகைப்படம் புளிய மரத்தில் தொங்கிய கார்த்தி
x
தினத்தந்தி 15 March 2021 1:28 AM GMT (Updated: 15 March 2021 1:28 AM GMT)

நடிகர் கார்த்தி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் கார்த்தி இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கையில் விருப்பம் உள்ளவர். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். செங்கல்பட்டு அருகே விவசாய நிலங்களை நேரில் பார்த்து காளையை ஏரில் பூட்டி உழுத புகைப்படங்களை வெளியிட்டார். ‘நமது ஆணி வேரான விவசாயத்தை அனைவரும் காப்போம். விவசாயிகளை சந்தித்த அனுபவம் மூலம் இயற்கையான காற்று, கால்நடை, கோழி ஆகிய அனைத்தும் கண்முன் வந்து செல்கின்றன’ என்றார். இந்த நிலையில் தற்போது புளியமரத்தில் ஏறி கிளைகளை பிடித்தபடி தலைகீழாக கார்த்தி தொங்கும் புகைப்படத்தை தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் ‘நான் சிறிய வயதில் புளியமரம் ஏறி விளையாடியது நினைவுக்கு வந்தது. இப்போது மீண்டும் எனது சொந்த கிராமத்தில் புளியமரம் ஏறி இருக்கிறேன்’ என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. கார்த்தி நடித்துள்ள சுல்தான் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்து வருகிறார்.

Next Story