தயாரிப்பாளர் மீது நடிகை புகார்


தயாரிப்பாளர் மீது நடிகை புகார்
x
தினத்தந்தி 19 March 2021 1:14 AM GMT (Updated: 19 March 2021 1:14 AM GMT)

நடிகைகள் மீ டூவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள்.

நடிகைகள் மீ டூவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் கூறி வருகிறார்கள். தற்போது இந்தி படங்கள் மற்றும் டி.வி. தொடர்களில் நடித்துள்ள திவ்யங்கா திரிபாதி தனக்கும் மோசமான அனுபவங்கள் ஏற்பட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் நடிக்க வந்த புதிதில் சில ஆண்கள் என்னிடம் அநாகரிகமான முறையில் அணுகினார்கள். இதன் மூலம் எனக்கு சில மோசமான அனுபவங்கள் ஏற்பட்டன. தொல்லைகளை சந்தித்தேன். முடியாது என்று சொன்னதால் வாய்ப்புகளை தடுக்க முயற்சி செய்தார்கள். எல்லா ஆண்களும் அப்படித்தான் என்று சொல்லவில்லை. மன ரீதியாக சித்ரவதையை உணர்ந்தேன். அந்த அழுத்தமும் விரக்தியும் என்னை வடிவமைத்தது. ஒரு நிகழ்ச்சியில் தயாரிப்பாளரின் அநாகரிகமான நடத்தையால் மனம் உடைந்தேன். எனது சுய கவுரவத்தை இழந்து தொழிலில் நீடிக்க விருப்பம் இல்லை. இதனால் ஒரு நிகழ்ச்சியைவிட்டே வெளியேறினேன். அந்த தயாரிப்பாளரின் பெயரை வெளியிட நான் விரும்பவில்லை'' என்றார்.

Next Story