போதைப் பொருள் வழக்கு: நடிகர் அஜாஸ் கான் மும்பை விமான நிலையத்தில் கைது


போதைப் பொருள் வழக்கு: நடிகர் அஜாஸ் கான்  மும்பை விமான நிலையத்தில் கைது
x
தினத்தந்தி 31 March 2021 4:47 AM GMT (Updated: 31 March 2021 4:47 AM GMT)

போதைப் பொருள் வழக்கில் நடிகரான அஜாஸ் கானை மும்பை விமான நிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

மும்பை

பிக் பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான அஜாஸ் கான் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் இருந்து மும்பை திரும்பிய அவரை விமான நிலையத்திலேயே கைது செய்த போதைத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரை தனியிடத்தில் வத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அஜாஸ்கான் தொடர்புடைய வீடுகள் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. அஜாஸ் கான் கைது செய்யப்படுவது இது முதல்முறையல்ல.
ஏற்கனவே போதைப் பொருள் வைத்திருந்ததாகவும் பேஸ்புக்கில் அவதூறு பதிவை போட்டதாகவும் மூன்று முறை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story