கொரோனா பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு கொரோனா வைரஸ் புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அக்ஷய் குமார் நேற்று முதல் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், நடிகர் அக்ஷய் குமார் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, அக்ஷய் குமார் தனது சமூகவலைதள பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், எனக்கு பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி, பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும் வேலை செய்கின்றன. நான் நலமுடன் உள்ளேன். ஆனால், மருத்துவ ஆலோசனைபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என்று நம்புகிறேன். அனைவரும் கவனமாக இருங்கள்’ என்றார்.
Related Tags :
Next Story