ஓட்டுப்போட அழைத்த சிவகார்த்திகேயன்


ஓட்டுப்போட அழைத்த சிவகார்த்திகேயன்
x
தினத்தந்தி 7 April 2021 2:38 AM GMT (Updated: 7 April 2021 2:38 AM GMT)

நடிகர் சிவகார்த்திகேயன் ஜனநாயக கடமையாற்றிய பின்னர் பொதுமக்களுக்கு ஓட்டுப்போட அழைப்பு விடுத்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் ஜனநாயக கடமையாற்றிய பின்னர் பொதுமக்களுக்கு ஓட்டுப்போட அழைப்பு விடுத்தார். அவர் கூறும்போது, ‘ஒரு குடிமகனாக எனது கடமையை செய்ய எண்ணி ஓட்டு போட்டு இருக்கிறேன். இந்த கடமையை எல்லோருமே செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை வாக்களிக்கும்போதும் இன்று நமது ஜனநாயக கடமையை செய்யபோகிறோம் என்று உற்சாகம் இருக்கும். கடமையை செய்து இருக்கிறேன். நான் பேசுவதை நிறையபேர் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். நாம் போகலாமா வேண்டாமா என்று சந்தேகம் இருந்தால் நாம் ஒரு இந்திய குடிமகன், நமது உரிமை வாக்களிப்பது என்பதை உணர்ந்து கண்டிப்பாக வந்து ஓட்டு போடுங்கள்'' என்றார்.

Next Story