‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்


‘பேராளன்’ படத்துக்காக இளையராஜா எழுதி பாடிய பாடல்
x
தினத்தந்தி 9 April 2021 6:29 AM GMT (Updated: 9 April 2021 6:29 AM GMT)

ஒரு கிராமத்தில் சட்டத்துக்கும், தர்மத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சட்டம் வென்றதா, தர்மம் வென்றதா? என்பதை கருவாக வைத்து, ‘பேராளன்’ என்ற படம் தயாராகிறது.

ஒரு கிராமத்தில் சட்டத்துக்கும், தர்மத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் சட்டம் வென்றதா, தர்மம் வென்றதா? என்பதை கருவாக வைத்து, ‘பேராளன்’ என்ற படம் தயாராகிறது.

டைரக்டர் ‘கொம்பன்’ முத்தையாவிடம் இணை இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்த ஆசைத்தம்பியும், அவருடைய நண்பர் முருகனும் இணைந்து, ‘ஆசை முருகன்’ என்ற பெயரில் டைரக்டு செய்கிறார்கள். ஓசூர் ஜோதி முருகேசன் தயாரிக்கிறார்.

கிராமத்து பின்னணியை கொண்ட இந்த படத்தில், விஜய் சத்யதேவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகி முடிவாகவில்லை. இளையராஜா இசையமைக்கிறார். அவர் ஒரு பாடலை எழுதியிருப்பதுடன், இசையமைத்து பாடியும் இருக்கிறார்.

தேனி, கம்பம் பகுதிகளில், அடுத்த மாதம் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Next Story