நடிகை சமீராரெட்டி கொரோனா தொற்று


நடிகை சமீராரெட்டி கொரோனா தொற்று
x
தினத்தந்தி 18 April 2021 10:45 PM GMT (Updated: 18 April 2021 7:46 PM GMT)

‘எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தன. இதனால் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது.

நடிகர் அதர்வா, நடிகை சமீரா ரெட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. அதர்வா பாணா காத்தாடி படத்தில் அறிமுகமாகி முப்பொழுதும் கற்பனைகள். பரதேசி, இரும்புக்குதிரை, கணிதன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். அதர்வாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதுகுறித்து அதர்வா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தெரிந்தன. இதனால் பரிசோதனை செய்து கொண்டேன். அப்போது கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். கொரோனா விதிமுறைகளையும் கடைபிடிக்கிறேன். விரைவில் குணம் அடைந்து மீண்டும் பணிகளை தொடங்குவேன்'' என்று கூறியுள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி தமிழில் சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், அஜித்குமாரின் அசல், விஷாலுடன் வெடி, ஆர்யாவுடன் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீரா ரெட்டி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறேன். நேர்மறையோடு வலுவாக இருக்க வேண்டிய தருணம் இது.’ என்று கூறியுள்ளார்.

Next Story