நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா


நடிப்பை தொழிலாக செய்யும் ராஷ்மிகா
x
தினத்தந்தி 6 May 2021 12:52 AM GMT (Updated: 6 May 2021 12:52 AM GMT)

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா தற்போது தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“என்னை பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள ஆர்வப்படும் விஷயங்களை நான் பேச தயங்குவது இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறேன். 3 மொழிகளிலும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. எங்கு போனாலும் சொந்த மொழி மாதிரிதான் தோன்றுகிறது.

சினிமா துறையில் நடிப்பு என்பது எங்கு போனாலும் ஒன்றுதான். மொழியை புரிந்து கொள்ள வெண்டும். அவ்வளவுதான். நான் நடிப்பை ஒரு தொழிலாக செய்கிறேன். நடிகையான பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்று எனக்கு புரிய ஆரம்பித்தது.

புதிய மொழிகளை சாதாரணமாக எல்லோரும் கற்றுக்கொள்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் மூன்று, நான்கு மொழிகள் தெரிந்து இருக்கிறது. சினிமாவை தொழிலாக செய்பவர்களுக்கு மொழியை கற்றுக்கொள்வது பெரிய விஷயம் இல்லை.

பள்ளியில் பசங்க 3 மொழிகள் கற்றுக்கொள்கிறார்கள். அப்படி இருக்க எனக்கு மொழி கஷ்டம் இல்லை. புதிய மொழிகளை தொழில் ரீதியாக கற்றுக்கொள்கிறேன். எந்த மொழியில் வாய்ப்பு வருகிறதோ அந்த மொழியை கற்றுக்கொள்ள கவனம் செலுத்துகிறேன்.

இவ்வாறு ராஷ்மிகா கூறினார்.

Next Story