மம்முட்டியின் சி.பி.ஐ. படத்தின் 5-ம் பாகம்


மம்முட்டியின் சி.பி.ஐ. படத்தின் 5-ம் பாகம்
x
தினத்தந்தி 24 May 2021 11:04 PM GMT (Updated: 24 May 2021 11:04 PM GMT)

மம்முட்டி நடித்து 1988-ல் வெளியான ஒரு சி.பி.ஐ டைரி குறிப்பு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை நிகழ்த்தியது.

மது இயக்கி இருந்தார். துப்பறியும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படம் அனைத்து மொழி திரைப்படத்துறையினரையும் திரும்பி பார்க்க வைத்தது. பிறமொழிகளில் டப்பிங் செய்தும் வெளியிடப்பட்டது. மொத்தம் இந்த படத்தின் 4 பாகங்கள் வந்துள்ளன. இரண்டாம் பாகம் ஜாக்ரதா என்ற பெயரில் 1989-ல் வெளியானது. 3-ம் பாகம் சேதுராம ஐயர் சி.பி.ஐ என்ற பெயரில் 2004-ல் ரிலீசானது. 4-ம் பாகமான நேரரியான் சி.பி.ஐ 2005-ல் வெளியானது.

தற்போது 15 வருடங்களுக்கு பிறகு இந்த படங்களின் தொடர்ச்சியாக சி.பி.ஐ 5-ம் பாகம் தயாராக உள்ளது. இந்த படத்தில் மம்முட்டி, முகேஷ் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளனர். ரெஞ்சி பணிக்கர், சவுபின் ஷாகிர், ஆஷா சரத், சாய்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பை கொரோனா பரவல் முடிந்த பிறகு ஆகஸ்டு மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

Next Story