பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்


பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 May 2021 12:50 AM GMT (Updated: 26 May 2021 12:50 AM GMT)

பிறந்த நாள் பரிசு ரசிகர்களுக்கு கார்த்தி வேண்டுகோள்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. ஊரடங்கை பின்பற்றி அனைவரும் வீட்டில் இருக்கும்படி நடிகர் நடிகைகள் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக்கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள முககவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும்'' என்று கூறியுள்ளார். கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடிக்கிறார். கைதி 2-ம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.



Next Story