‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார்


‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார்
x
தினத்தந்தி 30 May 2021 12:12 AM GMT (Updated: 30 May 2021 12:12 AM GMT)

‘‘எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இளையராஜா’’ யுவன்சங்கர் ராஜா மனைவி சொல்கிறார்.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர், யுவன்சங்கர் ராஜா. இவருடைய மனைவி ஸபரூன் நிஸார் முதன் முதலாக அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- உங்களின் நேசத்துக்குரியதாக இருந்து இப்போது யுவன்சங்கர் ராஜாவுடையதாக மாறிவிட்டது எது?

பதில்:- என் குடும்பம்தான். விளையாட்டுத்தனமான விவாதங்களில் கூட, என் குடும்பம் அவர் பக்கமே நிற்கிறது. எங்கள் குடும்பம் மொத்தமாக அவரது குடும்பமாக மாறிவிட்டது.

கேள்வி:- யுவனின் மனைவியாக மிக சிறந்த விஷயமாகவும், மிக மோசமான விஷயமாகவும் எதை கருதுவீர்கள்?

பதில்:- யுவனின் மனைவி என்பதால் அவருடைய இசையுலகுக்குள் முதலில் உலாவும் அனுமதி எனக்கு கிடைத்திருப்பது, சிறந்த விஷயம். யுவனின் மனைவி என்பதால் எனக்கு அபாரமான இசை அறிவு உள்ளதாக நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. உண்மை, அதற்கு நேர் எதிரானது. இதுவே மோசமான விஷயம்.

கேள்வி:- உங்களுக்குள் சண்டை நடப்பது உண்டா? எதற்காக சண்டை போடுவீர்கள்?

பதில்:- நாங்கள் இருவருமே தமிழர்கள் என்றாலும், இரண்டு பேரும் பேசிக்கொள்ளும் தமிழ் வித்தியாசமானது. எந்தவிதமான தமிழை எங்கள் மகளுக்கு கற்றுக்கொடுப்பது என்பதில் இருவருக்கும் இடையே சண்டை நடக்கும்.

கேள்வி:- சமீபத்தில் நீங்கள் யுவனிடம் கற்றுக்கொண்ட உயர்ந்த விஷயம் என்ன?

பதில்:- மனதில் எந்த கசப்பான விஷயத்தையும் சுமக்கக்கூடாது என்பதுதான். நாங்கள் அறிமுகமாகி ஒருவரையொருவர் புரிந்து கொண்ட காலத்திலும் சரி, திருமணம் ஆன பின்பும் சரி, அவர் எப்போதும் சாந்தமாகவே இருப்பார். எந்த விஷயத்துக்கும் உணர்ச்சிகளை கொட்ட மாட்டார். கோபப்பட மாட்டார். எதையும் அமைதியாகவே எதிர்கொள்வார். அவரிடம் இருந்து நானும் அதை கற்றுக்கொண்டேன்.

கேள்வி:- உங்களுக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் யார்?

பதில்:- இளையராஜா.

இவ்வாறு ஸபரூன் நிஸார் கூறினார்.


Next Story