மும்பை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றி திரிந்த பாலிவுட் நட்சத்திர காதலர்கள்; போலீசார் வழக்குப்பதிவு
மும்பை ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சுற்றி திரிந்த பாலிவுட் நட்சத்திர காதலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மும்பை
மும்பையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதற்காக டைகர் ஷெராப்- திஷா பதானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் இன்று தங்கள் சமூக ஊடகத்தில் தெரிவித்து உள்ளனர்.
கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் குடிமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு வற்புறுத்துவதற்காக டைகர் ஷெராஃப் மற்றும் திஷா பதானி ஆகியோர் நடித்த படங்களை உதாரணத்திற்கு மும்பை போலீஸ் பயன்படுத்தியது.
பிரபல இளம் இந்தி நடிகை திஷா பதானி. இவர் 2015-ல் வருண் தேஜா ஜோடியாக லோபர் தெலுங்கு படத்தில் அறிமுகமானார். கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கையை மையமாக கொண்ட ‘எம்.எஸ்.டோனி: தி அண்டோல்ட் ஸ்டோரி’ படம் மூலம் இந்திக்கு போனார்.
தொடர்ந்து அவர் நடித்த குங்பூ யோகா படம் வசூல் சாதனை நிகழ்த்தியது. அண்மையில் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான ராதே படத்தில் சல்மான்கானுக்கு ஜோடியாக நடித்து உள்ளார். நடிகை திஷா பதானி, பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை காதலித்து வருகிறார்.
இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறியதாக இவர்கள் இருவர் மீதும் மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஊரடங்கு சமயத்தில் இருவரும் காரில் சுற்றியதாகவும், போலீசார் இதுகுறித்து விசாரித்தபோது சரியான காரணத்தை தெரிவிக்காததால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
In the ongoing ‘War’ against the virus, going ‘Malang’ on the streets of Bandra cost dearly to two actors who have been booked under sections 188, 34 IPC by
— Mumbai Police (@MumbaiPolice) June 3, 2021
Bandra PStn . We request all Mumbaikars to avoid unnecessary ‘Heropanti’ which can compromise on safety against #COVID19
Related Tags :
Next Story