தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி


தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி
x
தினத்தந்தி 12 Jun 2021 12:59 AM GMT (Updated: 12 Jun 2021 12:59 AM GMT)

தற்கொலை செய்த நடிகர் சுஷாந்த் சிங் வாழ்க்கை பட வழக்கு தள்ளுபடி.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த வருடம் ஜூன் மாதம் மும்பையில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையான ‘எம்.எஸ்.தோனி த அன்ட் டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக சுஷாந்த் சிங் நடித்து பிரபலமானார். சுஷாந்த் சிங் வாழ்க்கையை “நய்யே: தி ஜஸ்டிஸ்” என்ற பெயரில் படமாக்கினர். இதில் சுஷாந்த் சிங் வேடத்தில் ஜூபர் கானும், காதலி ரியா சக்கரவர்த்தியாக ஸ்ரேயா சுக்லாவும் நடித்தனர். திலீப் குலாட்டி இயக்கினார்.

இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி சுஷாந்த் சிங் தந்தை கிருஷ்ணா கிஷோர் சிங் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் படத்துக்கு எதிராக தாக்கல் செய்த ஆதாரங்களில் தெளிவு இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Next Story