3 புதிய படங்களில் நயன்தாரா
நயன்தாரா நடித்த நிழல் மலையாள படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
இவற்றில் நெற்றிக்கண் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக உள்ளது. இதில் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார். அண்ணாத்த படத்திலும் நடித்து முடித்து விட்டார். இந்த படத்தில் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதி ஜோடியாக நடிக்கிறார். படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. இதையடுத்து மேலும் 3 புதிய படங்களில் நடிக்க இருக்கிறார்.
அதில் ஒருபடம் மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். மற்ற 2 படங்களும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தமிழில் தயாராகும் இந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Related Tags :
Next Story