மதுபானத்துக்கு ஆன்லைனில் பணம் வாங்கி நடிகை ஷபனா ஆஸ்மியிடம் மோசடி
மதுபானத்துக்கு ஆன்லைனில் பணம் வாங்கி நடிகை ஷபனா ஆஸ்மியிடம் மோசடி.
இந்தி திரையுலகின் மூத்த நடிகையான ஷபனா ஆஸ்மி 1970 மற்றும் 80-களில் 120-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தற்போது அவருக்கு 70 வயது ஆகிறது.
ஷபனா ஆஸ்மி ஆன்லைனில் மதுபானம் வாங்க பணம் கொடுத்து ஏமாந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஷபனா ஆஸ்மி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் செயலி மூலம் ஆன் லைனில் மதுபானம் வாங்க ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். மேலும் பணம் அனுப்பிய வங்கி கணக்கையும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அக்ஷய்கன்னா, நர்கிஸ் பக்ரி உள்ளிட்ட பல இந்தி பிரபலங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷபனா ஆஸ்மி ஆன்லைனில் மதுபானம் வாங்க பணம் கொடுத்து ஏமாந்ததாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து ஷபனா ஆஸ்மி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் செயலி மூலம் ஆன் லைனில் மதுபானம் வாங்க ஆர்டர் கொடுத்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்தி விட்டேன். ஆனால் அவர்கள் எனக்கு அதனை டெலிவரி செய்யவில்லை. நான் போன் செய்தும் எனது அழைப்புகளை எடுக்கவில்லை. என்னிடம் மோசடி செய்துவிட்டனர். எனவே எச்சரிக்கையாக இருங்கள்'' என்று கூறியுள்ளார். மேலும் பணம் அனுப்பிய வங்கி கணக்கையும் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அக்ஷய்கன்னா, நர்கிஸ் பக்ரி உள்ளிட்ட பல இந்தி பிரபலங்கள் ஆன்லைன் மோசடியில் சிக்கி ஏமாந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story